Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
, செவ்வாய், 29 டிசம்பர் 2015 (23:27 IST)
தமிழக காவல்துறையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் சிலருக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.
 

 
இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வா வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை, போலீஸ் டெலி கம்யூனிகேஷன் பிரிவு  டெக்னிகல் ஸ்டோர் இன்ஸ்பெக்டர் ஜே. கவுரி சங்கர்  தற்காலிக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு போலீஸ் அகாடமி, துணை போலீஸ் சூப்பிரண்டாக (டெக்னிகல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சென்னை, இன்ஸ்பெக்டர் கே.ரகு (டெக்னிகல்) டெலிகம்யூனிகேஷன் , கொள் முதல் பிரிவு சென்னை தற்காலிகமாக பதவி உயர்வு பெற்று,  காஞ்சிபுர சரக துணை போலீஸ் சூப்பிரண்டாக (டெக்னிகல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தேனி மாவட்டம், இன்ஸ்பெக்டர் (டெக்னிகல்) ஏ.வேலுச்சாமி  தற்காலிகமாக பதவி உயர்வு பெற்று, வேலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டாக (டெக்னிகல்) நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil