Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்புரபுவின் உடலில் காயங்கள் : கொலை செய்யப்பட்டாரா?

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:31 IST)
டெல்லியில் யூசிஎம்எஸ் மருத்துவமனையில் மர்மான முறையில் இறந்து கிடந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்கலுக்கு மருத்துவப் படிப்பு படிக்க செல்லும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் மர்மமான முறையில் இறப்பது தொடர் கதையாகி வருகிறது. 
 
இந்த சம்பவங்களைத் தொடர்ந்தது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு என்பவர் டெல்லியிலுள்ள யூசிஎம்எஸ் (University College of Medical Sciences) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் கடந்த 17ம் தேதி காலை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் இன்சுலினை தனக்கு தானே செலுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியானது. அவரின் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அவரின் கழுத்து பகுதி இறுக்கப்பட்டது போல காயங்கள் இருந்தது. மேலும், அவரின் தலைப்பகுதியிலும் காயங்கள் இருந்தன. எனவே, அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி சரத்பிரபுவின் தந்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருந்தால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments