Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் அதுவுமா ஈபிஎஸ்-ஐ டிஸ்சப்பாய்ண்ட் செய்த இந்திய ரயில்வே!!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (10:37 IST)
ரயில் சேவை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கோரியதை ரயில்வே நிராகரித்துள்ளது.  
 
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்கியது. 
 
நேற்று பிரதமர் மோடியுடனான வீடியோ கான்ஃபிரன்ஸில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என கோரினார். அதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என கேட்டார். 
ஆனால், இதனை இந்திய ரயில்வே நிராகரித்துள்ளது. அதாவது இன்று காலை முதலே ரயில் சேவைகள் துவங்கியது. அதன்படி, டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மே 13 ஆம் முதல் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும். 
 
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு இயக்கப்படும் ரயில், மே 15 ஆம் தேதி முதல் இயங்கும். இந்த ரயிலானது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும்.
 
அதோடு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தாள். எனவே, சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments