2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்.! மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி..

Senthil Velan
புதன், 28 பிப்ரவரி 2024 (11:35 IST)
2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம், பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 
 
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறி உள்ளதாகவும், 2047 ஆம் ஆண்டில் உலகளவில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் எனவும் மத்திய அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments