Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத ஏவுகனையை பரிசோதனை செய்கிறது இந்தியா..

Arun Prasath
புதன், 6 நவம்பர் 2019 (16:39 IST)
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ள அணு ஆயுத ஏவுகணை நாளை மறுதினம் பரிசோதனை செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கே4 அணு ஆயுத ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை கடந்த அக்டோபர் மாதம் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரிசோதனை செய்யப்படவில்லை. இந்நிலையில் கே 4 அணு ஆயுதம் நாளை மறுநாள் பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் வைத்து பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கே 4 அணு ஆயுதம் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சுமார் 3500 கி.மீ. தூரம் வரை பாய்ந்து தாக்கும் சக்திவாய்ந்தது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments