சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

Siva
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (18:35 IST)
இந்திய ரயில்வே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கொண்ட ரயில் எஞ்சினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை, சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி, இந்திய ரயில்வேயின் எரிசக்தி மாற்றப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
 
இந்த சோதனை வெற்றியை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ரயில்வேயின் இந்த புதிய சாதனையை பாராட்டினார். மின்சார ரயில்களுக்கு பிறகு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் எஞ்சினை இந்தியாவே தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டீசல் பயன்பாட்டை குறைத்து, கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 
இந்த ஹைட்ரஜன் ரயில் எஞ்சின், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைத்து மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த செயல்முறையின்போது, நீராவியை மட்டுமே வெளியிடுவதால், இது சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் மாசு இல்லாததாகும். இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் இந்திய ரயில்வேயின் அனைத்து டீசல் எஞ்சின்களையும் ஹைட்ரஜன் எஞ்சின்களாக மாற்ற உதவும். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments