Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்களித்த 6 பேருக்கு நன்றி: 233வது முறையாக தோல்வி அடைந்த வேட்பாளர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (13:29 IST)
வாக்களித்த 6 பேருக்கு நன்றி: 233வது முறையாக தோல்வி அடைந்த வேட்பாளர் அறிவிப்பு..!
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு 6 வாக்குகள் மட்டுமே பெற்ற வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களித்த 6 பேர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். எந்த தேர்தல் என்றாலும் அதில் போட்டியிடும் வழக்கத்தை உடையவர் பத்மராஜன். தேர்தல் மன்னன் என்று இவருக்கு ஒரு பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வழக்கம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலிலும் அவர் வழக்கம் போல் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு ஆறு வாக்குகள் கிடைத்துள்ளது. இருகுறித்து அவர் கூறியபோது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எனது 233 வது தோல்வி என்றும் இந்த தோல்வி எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த 6 பேருக்கு நன்றி என்று கூறிய சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் இனிவரும் தேர்தலில் நான் தொடர்ந்து போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார். 
 
233 முறை தோல்வி அடைந்து இந்த தோல்வி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய தேர்தல் மன்னன் பத்மராஜன் கருத்து ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments