Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் குழந்தை கடத்தல் வதந்திகள்.. வதந்தி பரப்பிய 5 பேர் கைது! – போலீஸ் கடும் எச்சரிக்கை!

Prasanth Karthick
புதன், 6 மார்ச் 2024 (09:04 IST)
சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் நடைபெறுவதாக போலிச் செய்தியை பரப்பிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



சமீபகாலமாக வாட்ஸப் உள்ளிட்ட செயலிகளில் குழந்தை கடத்தல் குறித்து பரவி வரும் போலிச் செய்திகளால் பல்வேறு பகுதிகளில் அப்பாவி தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் இவ்வாறான குழந்தைக் கடத்தல் போலிச் செய்தியை நம்பி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூலி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த காவல்துறை, குழந்தைகள் கடத்தப்பட்டதாக இதுவரை எந்த புகார்களும் வரவில்லை என்றும், இதுபோன்ற வாட்ஸப் ஃபார்வர்டுகளை நம்பி பொதுமக்கள் பிற நபர்களை தாக்குவது சட்டப்படி குற்றம் என்றும் கூறியிருந்தனர். மேலும் சமூக அமைதியை குலைக்கும் இதுபோன்ற செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ALSO READ: தமிழை அடுத்து ஆங்கிலம்.. பொதுத்தேர்வு எழுத வராத 12,000 மாணவர்கள்..

அப்படி இருந்தும் வாட்ஸப்பில் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்ந்து பரவி வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் திண்டுக்கல், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் இவ்வாறான போலிச் செய்தியை பரப்பிய 5 பேரை கைதுச் செய்துள்ளனர். போலிச் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் முதல்வர் மகனுக்குக் ரூ.4000 அபராதம்: போக்குவரத்து காவல்துறை அதிரடி..!

சுனிதா வில்லியம்ஸை சந்தித்த பூமியில் இருந்து சென்ற விஞ்ஞானிகள்: நாசா வெளியிட்ட புகைப்படம்..!

1000 கி.மீ. க்கு அப்பால் தேர்வு மையம் வைப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

கார் ஓட்டும்போது மாரடைப்பு! வாகனங்களை அடித்து தூக்கிய கார்! - அதிர்ச்சி வீடியோ!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வெயிலும் இருக்கும்! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments