Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் மழை; சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வானிலை அப்டேட்ஸ்!

Prasanth Karthick
வியாழன், 12 டிசம்பர் 2024 (10:49 IST)

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் மீண்டும் தொடர் மழை பெய்வதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

 

இந்நிலையில் 7 மாவட்டங்களில் நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதால் நீர் வழித்தடங்களில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

ALSO READ: ஒரு பிச்சைக்காரருக்கு இவ்வளவு சம்பாத்தியமா? உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரன் இவர்தான்!?
 

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments