Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெட்சுமி ஹோட்டல்களில் 3 வது நாளாக ரெய்டு! – சிக்கியதா முக்கிய ஆவணங்கள்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (13:57 IST)
சேலத்தில் பிரபலமான லெட்சுமி ஹோட்டல்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் பகுதியில் பிரபல தங்குமிடம் மற்றும் உணவகங்களை நடத்தி வரும் லெட்சுமி குழுமத்திற்கு தமிழகமெங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் சேலம் லெட்சுமி ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளரின் வீடு ஆகிய 5 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில் மூன்றாவது நாளான இன்று லட்சுமி ஓட்டலின் தஞ்சாவூர், திருச்சி, கோவை கிளைகளிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனை சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments