Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (15:28 IST)
30 நிமிடங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் சோதனையில் ஈடுப்பட்டனர். வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


 
தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து ஏராளாமான தங்கம், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. அவரிடம் சிக்கிய ஆவணங்கள் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு இருந்ததை அடுத்து தற்போது தலைமை செயலாளர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
 
சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ராம் மோகன் ராவ் மகன் விவேக் வீட்டில் சுமார் 10 மணி நேரமாக வருமான வரித்துறையினரால் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
 
தற்போது கிடைத்த தகவலின் படி சோதனை செய்த இடங்களில் முக்கிய ஆவணங்கள் மட்டுமே சிக்கியுள்ளதாக, பணம் மற்றும் தங்க நகைகள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் ஏதுவும் ரகசிய அறையில் பதுக்கப்பட்டுள்ளதாக என்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
 
கிடைத்த ஆவணங்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகிய துறையினர் தலைமை செயலகத்துக்கு எடுத்துச் சென்று பிரித்து சோதனை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments