Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தை குறிவைத்து மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (18:40 IST)
கடந்த நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தினார்கள். இந்நிலையில் தற்போதும் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நேரடி அரசியலில் இறங்கினர். இதனையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை சுற்றி சுற்றி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேர்தலின் போது ரெய்டு நடத்திய வருமான வரித்துறை கடந்த நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தையும், அவர்கள் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தினர்.
 
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து தற்போது சசிகலாவின் உறவினரான இளவரசியின் இரண்டு மகன்களில் ஒருவரான கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அதே போல சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டை பெட்டிகள் செய்து தரும் சாய் கார்ட்டன்ஸ் என்ற நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments