Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு.. அமைச்சர் எ.வ.வேலு ரெய்டுக்கு சம்பந்தமா?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:57 IST)
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் தற்போது திடீரென திருச்சியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி அண்ணா நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள சாமிநாதன் என்ற தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை வருமானவரித்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
லட்சுமி காபித்தூள் ஏஜென்சி வைத்துள்ள சாமிநாதன் பைனான்சியர் என்றும் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது உறவினர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும், திருச்சி தொழிலாளர் வீட்டில் ரெய்டுக்கும் தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. .
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments