Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மணி நேர போயஸ் கார்டன் சோதனை முடிவு: சிக்கிய ஆவணங்கள் என்ன?

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (05:21 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனை வீடு முழுவதும் இல்லை என்றும், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை என்றும் வருமான வரித்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.


 


இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த சோதனை முடிவடைந்து 10 அதிகாரிகள் வெளியே வந்தனர். சோதனையில் கடிதங்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவைகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாகவும், அவற்றில் முக்கிய ஆவணங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை குறித்து விவேக் கூறியபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களையும், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப் ஆகியவற்றையும்  வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அம்மா ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments