Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை: அண்ணாமலை பேட்டி எதிரொலியா?

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:41 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜி ஸ்கொயர் குறித்து பேட்டி அளித்த நிலையில் இன்று ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலும் இந்த தொழிலை செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்

மேலும் இந்நிறுவனத்தின் மீது அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் திடீரென இன்று சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முதல்வரின் மருமகனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையில் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் விளக்கம் அளித்திருந்த  நிலையில் இன்று திடீரென சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments