Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடந்த 5 ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தாத விஜய், நயன்தாரா, சமந்தா

கடந்த 5 ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தாத விஜய், நயன்தாரா, சமந்தா
, சனி, 3 அக்டோபர் 2015 (18:29 IST)
நேற்று முன்தினம் நடந்த அதிரடி வருமானவரி சோதனையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. ஒருநாள் சோதனையில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


 


புலி படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் 25 கோடிகள் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நடிகர் விஜய் கடந்த ஐந்தாண்டுகளாக முறையாக வரி செலுத்தவில்லை என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேபோல் நயன்தாரா, சமந்தாவும் கடந்த இரண்டு வருடங்களாக வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர்.

யார் யார் எவ்வளவு கோடி வரி ஏய்ப்பு செய்தனர், எத்தனை கோடி ரொக்கப் பணம் மற்றும் நகைகள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என்ற தகவல்களைச் சொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil