Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 80 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (10:22 IST)
தமிழ்நாட்டில் அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகம் உள்பட மொத்தம் 80 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம்,வேப்பேரி உள்ளிட்ட அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
 
மேலும் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள், கல்லூரி, வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
 
அதேபோல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், முன்னணி கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருறது.
 
தமிழகத்தில் மொத்தமாக இன்று ஒரே நாளில் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments