Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று 20 இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பு தகவல்..!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (09:50 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களிலும் வேப்பேரி, பூக்கடை , வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் சென்னை சவுகார்பேட்டை முத்தையா முதலில் தெருவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை நடந்து வருகிறது.

மேலும் தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி,  ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

சென்னையில் உள்ள ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதாவது உண்டா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments