Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு; கொத்தாய் சிக்கும் தொழிலதிபர்கள்! – கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (10:56 IST)
தமிழகத்தில் சமீப காலமாக நடந்து வரும் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வருமானவரி துறை ரெய்டில் பலர் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி வரும் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொருபக்கம் வருமான வரித்துறை நடத்தும் சோதனையில் தொழிலதிபர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான பகுதிகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் குறித்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஈரோட்டில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் ஊழல், லஞ்ச புகார்களில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாம் என்பதால் முக்கிய தொழில் புள்ளிகள் கலக்கத்தில் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments