மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. சென்னையில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (16:26 IST)
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பசுமை எரிசக்தி பிரிவில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். டிடிஎஸ் வரி பிடித்தலில் குளறுபடி ஏற்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சோதனை முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து முக்கிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edied by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments