கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை: ரவுண்டு கட்டி அடிக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (08:13 IST)
இன்று காலை முதல் ஜெயா டிவி மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் கொடநாடு பங்களாவிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.


 


மேலும் ஜெயா டிவி, இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, நமது எம்ஜிஆர் அலுவலகம், டிடிவி தினகரன் வீடு, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீடு, ஜாஸ் சினிமாஸ், விவேக் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருவதாகவும், இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்றும், அதன் பின்னரே முறைகேடுகள் நடந்ததா? எந்த அளவுக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது போன்ற தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments