Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான்; ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் : வருமான வரித்துறை அறிவிப்பு

விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான்; ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் : வருமான வரித்துறை அறிவிப்பு
, புதன், 7 அக்டோபர் 2015 (16:12 IST)
நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான். விரைவில் அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் புலி படக்குழுவினர் அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் 2 நாட்கள் சோதனை நடந்தது.
 
இதில் விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது.  சினிமா ரசிகர்கள் மற்ரும் சினிமா வட்டாரத்தில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இது பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது.
 
இது பற்றி நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தான் முறையாக வருமான  வரி செலுத்தியிருப்பதாகவும், ஊடகங்களில் தன்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தன்னைப் பற்றி தவறான தகவலை வெளியிட்டு ஊடகங்கள் என மனதைப் புண்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில், நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான் என்றும், அதற்கான ஆதரங்கள் வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இன்று வருமானத்துறை இப்படி அறிவித்திருப்பது, இந்த விவகாரத்தை மீண்டும் சூடு பிடிக்க வைத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil