Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்குள் இருந்த ரூ. 8 லட்சம் ’ செல்போன்கள் ’ திருட்டு’... பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (17:23 IST)
உலகம் எவ்வளவு முன்னேறினாலும் கூட அடுத்தவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படும் எண்ணமும், திருட்டுத்தனமும் மட்டும் மனிதர்களை விட்டுநீங்கவில்லை என்றே சொல்லலாம். கள்ளக்குறிச்சியில் ஒரு செல்போன் கடையில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போன்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள காந்திசாலையில் ஸ்ரீதர் என்பர்  அதிசயா என்ற பெயரில் மொபைல் ஷாப் வைத்திருக்கிறார். இன்று காலையில் தம் கடையை திறக்க வந்த ஸ்ரீதர் ,கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளிருந்த மொபைல் போன்கள் எல்லாம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தினர். அப்போது கடையில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள மொபைல்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
 
கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments