அடுத்த 48 மணி நேரத்தில்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! - வானிலை அலெர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 8 நவம்பர் 2024 (14:51 IST)

வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று வரை சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு உள்ளது.

 

அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

ALSO READ: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தல் வியூக நிறுவனம்.. விஜய்யுடன் பேச்சுவார்த்தை..!
 

இதனால் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments