Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 48 மணி நேரத்தில்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! - வானிலை அலெர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 8 நவம்பர் 2024 (14:51 IST)

வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று வரை சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு உள்ளது.

 

அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

ALSO READ: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தல் வியூக நிறுவனம்.. விஜய்யுடன் பேச்சுவார்த்தை..!
 

இதனால் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments