Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே நாளில் 7 பெண்கள் மாயம்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (10:33 IST)
சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் பிரச்சனைகளுக்கு குறைவின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, அடுத்தடுத்து அரசியலில் குதிக்கும் நடிகர்களின் பிரச்சனை, ஆளுங்க்கட்சி பிரச்சனை, எதிர்கட்சிப் பிரச்சனை என பிரச்சனைகளுக்கு பஞ்சமின்றி உள்ளது. மேலும் தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தலைதூக்கி நிற்கின்றது.
 
இந்நிலையில் மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்த விநோதினி, சிட்லபாக்கத்தை சேர்ந்த நீலாதேவி (25), திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) வெள்ளக்காடு சிவரஞ்சனி (16), புல்லரம்பாக்கம் கலைவாணி (20), ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த வர்ஷா (20) ஆகியோர் வெளியே சென்று வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீஸார் காணாமல் போன பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல் போயிருப்பது சென்னைவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments