Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 111% அதிகளவில் பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:38 IST)
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்யும் என்றும், சுமார் 111% அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனமழை பெய்தால், தமிழகம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்; இருப்பினும், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து நம்பிக்கை உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

16 வயது மாணவனுக்கு பலமுறை பாலியல் பலாத்காரம்.. கைதான ஆசிரியைக்கு எளிதாக கிடைத்த ஜாமின்..!

ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டில் இரட்டை குழந்தைகள் பிரசவம்; ஒரு குழந்தை உயிரிழப்பு!

ஆதார், வாக்காளர் அட்டைகள் நம்பகமானது அல்ல.. பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் வேண்டும்: தேர்தல் ஆணையம்

அடுத்த கட்டுரையில்
Show comments