350 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்த ஜேப்பியார் குழுமம் – வருமான வரித்துறை தகவல் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:13 IST)
தமிழகம் எங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஜேப்பியார் குழுமம் சுமார் 350 கோடி ரூபாய் வருவாயை மறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டவர் ஜேப்பியார். அவரது ஆட்சியின் போது கல்வி நிறுவனங்களை தொடங்கினார். இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியா குழுமம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்யபாமா கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.ஆர் கல்லூரி, பனிமலர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின்போது கணக்கில் காட்டாத ரூ.3 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.5 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இப்போது சுமார் 350 கோடி ரூபாய் பணத்தை கணக்கில் அந்நிறுவனம் மறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments