Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (14:24 IST)
எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

பல்வேறு கட்ட  அரசியல் பரபரப்புகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த், வியாழன் அன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
மேலும், இந்த முறை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் , கட்சி தொடங்குவதைப் பற்றி ஆலோசனை செய்யவுள்ளாதாகவும், அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
 
அதன்படி ரஜினிகாந்த், கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலர்களுடன்  அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, ஆலோசனை நடத்தினார். அபோது அவர்களுக்கு ரஜினி பல ஆலோசனைகளுக்கு நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர், போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே வைத்து ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது, ஓராண்டுக்கு பிறகு கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளைச் சந்தித்து பேசினேன். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியதில் எனக்கு திருப்தியாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை.எனக்கு ஏமாற்றம் இருந்தது. அது என்னவென்று இப்போது கூற முடியாது. நேரம் வரும்போது கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments