ஆண்டிபட்டிக்கு இதெல்லாம் செய்வேன்... பிரசாரத்தை ஆரம்பித்த உடன்பிறப்பு!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:19 IST)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் உடன் பிறந்த அண்ணண் தம்பிகள் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 
ஒரு குடும்பத்துக்கே இரண்டு கட்சிகளும் சீட் கொடுத்துள்ள சம்பவத்தை பார்த்து தமிழக மக்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். 
 
இந்நிலையில், நேற்று ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகாராஜன் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகாராஜன், "ஜவுளிப்பூங்கா திட்டத்தை ஆண்டிபட்டியில் செயல்படுத்துவேன், , ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள 45 கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்படும். அதற்காக முல்லைப்பெரியாறு ஆற்றிலிருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவேன். அண்ணன், தம்பியாக இருந்தாலும் நான் வேற கட்சி, அவரு வேற கட்சி, இதுல சொல்றதுக்கு வேறு எதுவும் இல்லை என கூறிவிட்டு பிரசாரத்தை தொடர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments