Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீப் பாடல் பற்றிய கேள்வி: பத்திரிக்கையாளருக்கு டோஷ் விட்ட இளையராஜா (வீடியோ)

பீப் பாடல் - இளையராஜா கோபம்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2015 (17:14 IST)
நடிகர் சிம்பு பாடி சர்ச்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு இளையராஜா கோபமடைந்து அவரை திட்டி தீர்த்து விட்டார்.


 
 
சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது இசையமைப்பாளர் இளையராஜா, அவரே களத்தில் இறங்கி ஏராளமான உதவிகள் செய்தார். மழை வெள்ளத்தால் சூழ்ந்த ஒரு காது கேளாதவர் பள்ளிக்கு சென்று, அங்கு தவித்த குழந்தைகளை மீட்டார். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களும் வழங்கினார்.
 
இந்நிலையில், மழையால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு செய்தியாளர், சமீபத்தில் வெளியாகி சர்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி அவரிடம் கருத்து கேட்டார்.
 
அதில் கோபமடைந்த இளையராஜா “உனக்கு அறிவிருக்கிறதா? அதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம்?” என்று கேள்வி கேட்டு அந்த அந்த செய்தியாளரை ஒரு வழி பண்ணி விட்டார். 
 
அருகிலிருந்தவர்கள் அவரை சமாதனப்படுத்தினர்.அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. 
 
அதை நீங்களே பாருங்கள்...
 

நன்றி : நியூஸ்7

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments