Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாதிக்கே இந்த அடின்னா..உயிரோடு இருக்கும் போது? - இளங்கோவன் அதிரடி

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (14:24 IST)
ஜெ.வின் சமாதியை சசிகலா இந்த அடி அடிக்கிறார். அவர் உயிரோடு இருக்கும் போது என்ன அடி அடித்தார்களோ என கிண்டலடித்துள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன், சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, வாயில் முனுமுனுத்தவாறு தனது கையால் ஜெ.வின் சமாதியை 3 முறை ஓங்கி அடித்து சபதம் செய்தார். இது, அங்கிருந்த அதிமுகவினருக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சமூக வலைத்தளங்களில் இதை பலரும் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு கடுமையாக கலாய்த்தனர். 


 

 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் “ ஊழல் செய்தவர்களுக்கு தக்க தண்டனை  கிடைத்துள்ளது. எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சமாதியில் இந்த அடி அடித்தவர்கள், அவர் உயிரோடு இருக்கும் போது எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள் எனவும், ஜெ.வை அடித்தே கொன்றிருப்பார்கள் எனவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 
 
மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சமாதியிலேயெ இந்த அடி விழுகிறது எனில், அடி வாங்கியர் நிச்சயம் உயிரோடு இருந்திக்க வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments