Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமாதிக்கே இந்த அடின்னா..உயிரோடு இருக்கும் போது? - இளங்கோவன் அதிரடி

சமாதிக்கே இந்த அடின்னா..உயிரோடு இருக்கும் போது? - இளங்கோவன் அதிரடி
, வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (14:24 IST)
ஜெ.வின் சமாதியை சசிகலா இந்த அடி அடிக்கிறார். அவர் உயிரோடு இருக்கும் போது என்ன அடி அடித்தார்களோ என கிண்டலடித்துள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன், சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, வாயில் முனுமுனுத்தவாறு தனது கையால் ஜெ.வின் சமாதியை 3 முறை ஓங்கி அடித்து சபதம் செய்தார். இது, அங்கிருந்த அதிமுகவினருக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சமூக வலைத்தளங்களில் இதை பலரும் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு கடுமையாக கலாய்த்தனர். 

webdunia

 

 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் “ ஊழல் செய்தவர்களுக்கு தக்க தண்டனை  கிடைத்துள்ளது. எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சமாதியில் இந்த அடி அடித்தவர்கள், அவர் உயிரோடு இருக்கும் போது எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள் எனவும், ஜெ.வை அடித்தே கொன்றிருப்பார்கள் எனவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 
 
மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சமாதியிலேயெ இந்த அடி விழுகிறது எனில், அடி வாங்கியர் நிச்சயம் உயிரோடு இருந்திக்க வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெஜாரிட்டியை நிரூபித்த பின்பு வாங்க: எடப்படியாருக்கு சசிகலா உததரவு