Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை செய்த ஐஐடி மாணவர் கைது

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (20:04 IST)
பள்ளி மாணவியை தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை செய்த ஐடிஐ மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
இராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்தவர் மாணவி [ஐஸ்வர்யா - பெயர் மாற்றப்பட்டுள்ளது]. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் ரமேஷ்.
 
இந்நிலையில், மாணவி ஐஸ்வர்யா பள்ளிக்கு சென்று வரும் போது, ரமேஷ் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இது குறித்து மாணவி பலமுறை எச்சரித்தும் ரமேஷ் தொடர்ந்து அதே செயலை செய்து வந்தாராம். இந்நிலையில் ரமேஷ், மாணவியின் தந்தை ராமரிடம் பிரச்சனை செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமர் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஐடிஐ மாணவர் ரமேஷை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments