Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் 5 ஆண்டுகளுக்கு சினிமா சான்ஸே கிடையாது! - தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி முடிவு!

Prasanth Karthick
வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:36 IST)

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல்களை தடுக்க தென்னிந்திய நடிகர் சங்கம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

 

 

நேற்று தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

அதில் தமிழ் சினிமாவில் பாலியல் வன்கொடுமை புகார்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்டவர் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு, புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு திரைத்துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பரிந்துரை செய்யப்படும்.
 

ALSO READ: 'வாழை’ படம் பார்த்த அமைச்சர் உதயநிதி.. ஒரு ஆண்டுக்கு முன்பே என்ன சொன்னார் தெரியுமா?
 

பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து கொடுக்கும்.

 

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை அளிக்க தனி தொலைப்பேசி எண் ஏற்கனவே உள்ளது. தற்போது இமெயிலும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் புகார் அளிக்கவும், மீடியாக்களில் பேசுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

அதுபோல யூட்யூபில் திரைத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தை அவதூறாக பேசுபவர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை கமிட்டி தரும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்