Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியாக பதிலளிக்க முடியாமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பேட்டியளிக்க வைப்பதா.? முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கண்டனம்..!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (17:54 IST)
போதைப் பொருள் கடத்தலுக்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க மக்கள் எழுச்சிப் போரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கியதாக தெரிவித்துள்ளார்.
 
போதை கலாச்சார சீரழிவிற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், 'டிரக் மாஃபியாக்களாக' வலம் வரும் திமுக நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி 25-ல் சேலம் பொதுக்கூட்டத்தில் தனது கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்ததை ஜெயக்குமார் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு ஒருவார காலம் ஆன நிலையில், எந்தவிதமான தெளிவான விளக்கத்தை, ஆளும் திமுக அரசின் சார்பாகவோ, கட்சியின் சார்பாகவோ தெரிவிக்காத நிலையில், இந்த மக்கள் விரோத அரசுக்கு பாடம் புகட்ட நேற்று தமிழகம் முழுவதும் 'போதை பொருட்கள் கலாச்சார சீரழிவை' எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அதிமுகவினர் நடத்திக் காட்டினார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த ஆர்பாட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்க முடியாமல், ஆர்.எஸ். பாரதி மூலம் பேட்டி அளிக்க வைத்துள்ளார் என்றும் முதலமைச்சரின் இந்த செயலை கண்டிப்பதாகவும், முழுமையான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மதுரை எய்ம்ஸ் வரும்..! ஆனால் வராது..! என்ன சொல்கிறார் அமைச்சர் ரகுபதி..!
 
தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முழுமையாக தடுக்க கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments