Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுத்தால்...? வைரலாகும் புகைப்படம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:34 IST)
கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் சிவக்குமாருடன் ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது ஆவேசமடைந்த சிவக்குமார், அந்த இளைஞரின் செல்போனை கீழே தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞன் கூட்டத்தில் தன் செல்போனை காணாமல் தேடும் காட்சி பரிதாபமாக இருந்தது.

அதை தள்ளிவிட்ட சிவக்குமாரின் செயலுக்கு பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள்  எழுந்தன. பின்னர் சிவக்குமார் அந்த இளைஞனை அழைத்து புது செல்போனை வாங்கிக்கொடுத்தார். இவ்விஷயம் அப்போது வைரலானது. 
 
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நெட்டிஷன்களால் இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அதில் முதல் படத்தில் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று ஒருவர் செல்பி எடுக்கிறார். இரண்டாவது படத்தில் மிகக்கொடிய சுறா மீனுடன் ஒருவர் செல்பி எடுக்கிறார். மூன்றாம் படத்தில் காட்டு ராஜாவான சிங்கத்துடன் அமர்ந்து ஒருவர் செல்பி எடுக்கிறார். அடுத்து ஒருவர் சிவக்குமாருடம் செல்பி எடுக்கிறார்.
 
அதாவது மேற்சொன்ன எல்லாவற்றையும் போல நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுப்பது எவ்வளவு ஆபத்து என்பதை குறிப்பதாக இப்புகைப்படம் உள்ளது. இந்தப் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments