Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்க புதிய வழி சொன்ன ஹெச்.ராஜா!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2016 (14:25 IST)
திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. தமிழகம் முன்னேற வேண்டுமானால், திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய ஹெச்.ராஜா, “தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இந்தியாவிலேயே, ஒரு மாநிலத்தில் முதன் முதலில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சோதனை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. தமிழகம் முன்னேற வேண்டுமானால், திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தமிழகம் ஊழலில் சிக்கி தகிக்கிறது. தற்போது தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

சமீபத்தில் சேகர்ரெட்டி என்பவர் வீட்டில் ரூ.100 கோடிக்கு அதிகமான பணம், 170 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இவர் ஆளும் அதிமுக கட்சியில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்.

எனவே தமிழகம் முன்னேற, திராவிடக் கட்சிகள் அனைத்தையும் ஒழித்து, அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் கூறி வருகின்றன” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறார்! போர் சூழல் குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கருத்து!

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த போப் ஆகிறாரா ஆப்பிரிக்க கருப்பின கார்டினல்? - அடுத்த போப் ஆண்டவருக்கான பரபரப்பான போட்டி!

எப்ப வேணாலும் யுத்தம் வெடிக்கலாம்? இந்தியா - பாகிஸ்தானை சமாதானப்படுத்த வருகிறது அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments