கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னுடைய இலங்கை பயணம் குறித்தும், பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்தும் பேசியது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இது சமூக வலைத்தளங்களிலும் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சீமான் கூறுவது அத்தனையும் பொய் என்றும், இல்லை அவர் கூறுவது உண்மைதான் என்றும் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், அதே தொலைக்காட்சியில் சீமான் கூறுவது பொய் என்ற வகையில் பேசும் ஒருவரின் வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக நடிகர் ராஜ்கிரண் அவர்கள் பிரபாகனை எந்த காரணத்திற்காக சந்தித்தோம் என்பதை குறித்தும் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.