Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜெயலலிதா சொன்னால் பதவியை ராஜினாமா செய்வேன்’ - சசிகலா புஷ்பா அதிரடி

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (19:25 IST)
ஜெயலலிதா கேட்டுக்கொண்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
 

 
திருச்செந்தூர் அருகே உள்ள வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில், அவரது 13வது நினைவு நாளை முன்னிட்டு சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் கேட்டுக்கொண்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்துவிடலாம். அவர்களுக்கு பின்னால் இருக்கும் இன்னொரு கும்பலுக்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
 
முதலமைச்சர் வயதில் பெரியவர். அதனால் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்களை முதலமைச்சர் தெரிந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments