Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி!

ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2017 (16:34 IST)
ஒட்டு மொத்த தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் ஒரே கோரிக்கையுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் வேளையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததையடுத்து தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த முறை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வேண்டும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய வேண்டும் இல்லையென்றால் தடையையும் மீறி நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.
 
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாஜக அதனை ஆதரிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அன்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு எதிராக தற்போது கருத்து கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி.


 
 
தன்னுடையை டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தின் தடையையும் மீறி சட்டத்தை மதிக்காமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை என கூறி மத்திய அரசு கண்டிப்பாக குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தும் என கூறினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக தலைவர்களில் மாறுபட்ட கருத்து நிலவி வருவது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments