Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..! இபிஎஸ்

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (13:03 IST)
தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் மதுரைக்கு எந்த நல்ல திட்டங்கள் கொண்டு வரவில்லை என்றார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் தொழிற்நுட்ப பூங்கா அமைக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். 
 
அதிமுக ஆட்சியில் 1292 கோடியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டத்தை திமுக அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
 
இந்த ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாகவும், எல்லா வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாகவும், விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், திமுக ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட மக்களைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
மதுரை விமான நிலைய ஓடுதளம் அண்டர் பாஸ் முறை திட்டத்திற்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அவர் கூறினார்.

ALSO READ: முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு..! மார்ச் 22 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டார். மேகதாது அணை விவகாரத்தில் திமுக துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments