Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வெற்றி பெற்றால் சசிகலா தான் முதல்வர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (13:47 IST)
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு எதிராக அதிரடி கருத்துக்களை கூறிவரும் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தற்போது ஒரு அதிரடி கருத்தை கூறியுள்ளார்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் மனோகரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா முதல்வராக போவது இல்லை, சசிகலா தான் முதல்வராக போகிறார். எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண் என கூறினார்.
 
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரச்சாரம் செய்த சுப்பிரமணியன்சுவாமி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயில் தண்டனை பெறப்போகும் ஜெயலலிதாவால் முதல்வராக முடியாது என கூறினார். ஜெயலலிதா அரசியலுக்கு வரும் போது ஒரு ரூபாய் கூட சொத்து இல்லை, ஆனால் தற்போது அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கு 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறப்போகிறார்.
 
மேலும் ஜெயலலிதா முதல்வராக போவது இல்லை, சசிகலா தான் முதல்வராக போகிறார். எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண் என்ற திரியை கொளுத்தி போட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments