Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பேச்சை கேட்டால் பூஜியம்தான் பரிசாக கிடைக்கும்: தங்க தமிழ்ச்செலவன்

Webdunia
ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (11:51 IST)
பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
 
மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று நாங்கள் ஆரம்பம்  முதலே கூறி வருகிறோம். ஆனால் தற்போது துணை முதல்வரே, 'மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக ஒப்புக்கொண்டு விட்டார்.
 
மோடி பேச்சை கேட்டு இணைந்ததால்தான் அதிமுகவுக்கு ஆர்.கே.நகரில் தோல்வி கிடைத்தது. இன்னும் மோடி பேச்சை கேட்டுக் கொண்டே இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பூஜ்யம் தான் பரிசாக கிடைக்கும்' என்று தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments