Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் மாற்றம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் மாற்றம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் மாற்றம்
, திங்கள், 4 ஜூலை 2016 (22:36 IST)
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இது குறித்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
 
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன், வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குனர் சாந்தா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
தொல்லியல், கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிர அரசியலில் களம் இறங்குகிறார் பிரியங்கா காந்தி