Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி நான் செல்போன் பயன்படுத்தமாட்டேன்: சு.ப.உதயகுமார்

இனி நான் செல்போன் பயன்படுத்தமாட்டேன்: சு.ப.உதயகுமார்

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (01:30 IST)
இனி நான் செல்போன் பயன்படுத்தமாட்டேன் என அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் சபதம் செய்துள்ளார்.
 

 
இது குறித்து, அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், எனது கைப்பேசி உடைந்துவிட்டது. கொஞ்ச நாட்களுக்கு இன்னொன்றை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனவே முகநூல் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி இப்படிக்கு,சு ப. உதயகுமாரன் என தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில தினங்களாக சு.ப. உதயகுமாருக்கும், அவருடன் உள்ள நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், இந்த கருத்து வேறுபாட்டை தீர்க்க சிலர் முயன்று வருவதாகவும், இதற்காகவே, உதயகுமார் தனது செல் போன் பயன்பாட்டை தவிர்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், வரும் சட்ட மன்றத் தேர்தலில் சு.ப.உதயகுமார் நிற்க முயன்றுவருவதாகவும், அதனால், அவரது செல் போன் உரையால்களை காவல்துறை ரகசிய பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதால் செல் போன் உபயோகத்தை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தான் ஏன் செல்போன் பயன்படுத்தவில்லை என் உதயகுமார் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments