Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (17:48 IST)
சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
 

 
அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றிருந்தார்.
 
இன்று சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில், "விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக பிரசாரம் செய்வேன்" என்றார்.
 
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன் அதுதொடர்பாக டெல்லி தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments