Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் வரவேற்பேன்: சசிகலா

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:01 IST)
ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் வரவேற்பேன் என சசிகலா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக தற்போது ஓபிஎஸ் பிரிவு, ஈபிஎஸ் பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் ஓபிஎஸ் பிரிவில் சசிகலா மற்றும் தினகரனை சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் அவரை வரவேற்பேன் என்றும் அவர் மட்டுமல்ல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றார்கள் என்றும் அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியுள்ளார்
 
திருத்துறைப்பூண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments