Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்-சீமான்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (13:53 IST)
அடுத்தாண்டு  நடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள  தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில்  சில கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று சேலத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''அதிமுக பொதுச்செயலாளர் சீமான் எடப்பாடி பசனிசாமியை சந்தித்து பேசினேன். கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் நான் ஏற்கவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்… நாடாளுமன்றத் தேர்தலில்  நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments