Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தாயை பழிவாங்க 7ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்’ : வாலிபர் வாக்குமூலம்

’தாயை பழிவாங்க 7ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்’ : வாலிபர் வாக்குமூலம்
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (01:20 IST)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர்கள் உத்திரமூர்த்தி - மீரா. இவர்களது மகள் உஷா ராணி (12). உஷா ராணி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
 

 
இந்நிலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த உஷாராணி தன்னுடைய தாய் மீராவுடன் வயல்வெளிக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் உள்ள கோவிலில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
 
பிறகு உஷா ராணி, விளையாடிவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றிருக்கிறார். இதனால் அவரது தாய் மீரா மட்டும் வயல்வெளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். உஷாராணி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த மீரா பல இடங்களில் மகளை தேடினார். எங்கும் அவர் இல்லை.
 
இதனையடுத்து, வயல்வெளிக்கு சென்றவர்கள் கரும்பு தோட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் திடீர் மண்மேடு இருப்பதை பார்த்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் குச்சியால் கிளறி பார்த்தபோது ஒரு உடல் தெரிந்தது. அந்த உடல் காணாமல் போன உஷாராணி என்பது தெரியவந்தது.
 
இந்நிலையில் உஷா ராணியை அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (35) கழுத்தை நெரித்து கொன்று கரும்பு தோட்டத்தில் புதைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து சேகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
பின்னர் காவல் துறையினரிடம் சேகர் அளித்த வாக்குமூலத்தில், உஷாராணியின் தாயார் மீரா வயலில் குளித்துக்கொண்டிருந்த போது எட்டிப் பார்த்ததாகவும், இதனால், மீராவும் அவரது கணவர் உத்ரமூர்த்தியும் திட்டியதாகவும் கூறியிருக்கிறார்.
 
மேலும், சிறுமி உஷா ராணியின் அக்காவின் கையைப் பிடித்து ஒருநாள் இழுத்துள்ளார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூற அவர்கள் வீட்டிற்கு வந்து சேகரை தாக்கியுள்ளனர்.
 
இதனால் எப்படியும் அவர்களது குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து உஷாராணியை அழைத்துக் கொண்டு கரும்பு தோட்டத்துக்கு சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
 
அப்போது அங்கிருந்து தப்பிச் சென்ற சேகர் தான் கல்லால் தலையில் தாக்கியதோடு, அவரை கரும்பு தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சசிகலா புஷ்பா விவகாரத்தில் ஜெயலலிதா உண்மையை சொல்ல வேண்டும்’ - ஸ்டாலின்